Silambarasan.S.A .F.M.[Bahrain]


சிலம்புவின் காண இசை மழை

சனி, 17 ஏப்ரல், 2010











உன் நினைவருகில்...! விண்ணைத் தாண்டிப்
போகுது.....என் எண்ணம்.
என்னைத் தாண்டிப்
போனது....வந்த துன்பம்.

மடல் கண்டு உன்னை அணைக்க....
கரம் இங்கு நீட்டுகிறேன்.
நீ..... வருவாயா...
உன்னிதயத்தைத் தருவாயா.

உன் கைப்பட்ட வரிகள்...
என் மீது விழுந்து.
புதுராகம் பாடுது...
என்னுள்ளம்.

மை கொண்ட விழிகள்...
உன் காதல் கண்டு.
மணவறை ஆனது...
என்னிதயம்.

கிளிகூட உன் பெயரை...
அழகாகச் சொல்லும்.
அதுகூட பார்க்கிறது...
உன்வரவை.

உன் காதல்...
மடல்கள்.
இரவென்றால் எனக்கு...
பஞ்சுமெத்தை.

காலம் எல்லாம்...
உன்னோடு வாழ.
காத்திருக்கின்றேன்...
உன் நினைவருகில்.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Powered By Blogger