Silambarasan.S.A .F.M.[Bahrain]


சிலம்புவின் காண இசை மழை

புதன், 14 ஏப்ரல், 2010

அழகு






பூக்கள் பூக்கும்
உன்னைக் கண்டால்
ஏக்கம் கொள்ளும்.
பெளர்ணமி நிலவும்
பார்த்தால் உன்னை
தேக்கம் கொள்ளும்.

கண்ணே உன்னை
கண்டேன் முதல்நாள்
கொண்டேன் ஆசை
என்னை நீ ஏற்றிட
உன் அன்பை பெற்றிட
அதில் நான் நிலைத்திட.

எல்லாம் எல்லாம்
உன்னில் அழகு
எதை நான் சொல்வேன்
உன்னில் குறைவு.
உச்சம் நிறைவு
உந்தன் அழகு
மிச்சம் இல்லை
அச்சம் கொள்ள.

உன் புன்னகை அழகில்
புதைந்து போனேன்.
உன் கண்களின் அழகில்
கரைந்து போனேன்.
உன் வார்த்தையின் அழகில்
நிறைந்து போனேன்.
மொத்த உன் அழகில்…..நான்
தொலைந்து போனேன்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Powered By Blogger