
அன்பே
பாறைகூடப் பூப்பூக்கும் உன்
பொன்முகத்தைக் கண்டால்
தேயும் நிலாக்கூட
தினசரி வந்து போகும் உன்
பிறைபோல் நெற்றி பார்க்க
சிகரம்கூட சரிந்து பார்க்கும் உன்
சிரிப்பொலி கேட்டால்
சத்தமில்லாது நீ நடந்து போகையில்
மண்கூட முத்தம் தருமடி
காற்றில் உன் மூச்சுப்படுவதால் அது
தென்றலாய் மணம் வீசுதடி
கானகியே
நீ பாடும் குரல் கேட்டு
குயில்கூட தன் குரல் மற்ந்துபோச்சடி
ஆடும் மயில்கூட தன்
ஆட்டமிழந்து அந்தரிக்குதடி
ஆசை நாயகியே
ஆனந்தம் கொள்கின்றேனடி உன்
அழகினை இவர்கள் புரிந்து கொண்டதால்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக