Silambarasan.S.A .F.M.[Bahrain]


சிலம்புவின் காண இசை மழை

சனி, 17 ஏப்ரல், 2010

ஆசை நாயகி







அன்பே
பாறைகூடப் பூப்பூக்கும் உன்
பொன்முகத்தைக் கண்டால்
தேயும் நிலாக்கூட
தினசரி வந்து போகும் உன்
பிறைபோல் நெற்றி பார்க்க

சிகரம்கூட சரிந்து பார்க்கும் உன்
சிரிப்பொலி கேட்டால்
சத்தமில்லாது நீ நடந்து போகையில்
மண்கூட முத்தம் தருமடி

காற்றில் உன் மூச்சுப்படுவதால் அது
தென்றலாய் மணம் வீசுதடி
கானகியே
நீ பாடும் குரல் கேட்டு
குயில்கூட தன் குரல் மற்ந்துபோச்சடி

ஆடும் மயில்கூட தன்
ஆட்டமிழந்து அந்தரிக்குதடி
ஆசை நாயகியே
ஆனந்தம் கொள்கின்றேனடி உன்
அழகினை இவர்கள் புரிந்து கொண்டதால்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Powered By Blogger