Silambarasan.S.A .F.M.[Bahrain]


சிலம்புவின் காண இசை மழை

சனி, 26 டிசம்பர், 2009

முத்தம்




முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?

தேவதை




நான் முத்தம் கேட்கையில்
சீ! பொறுக்கி என்பாய் வெட்கத்துடன்!

நீ வெட்கப்படும் அழகை காணவே ஆயிரம் பொறுக்கிதனங்கள் செய்யலாம்!

பெண் வெட்கபட்டால் தேவதை ஆகிறாள்! தேவதை நீ வெட்கபட்டால் நான் என்ன ஆவது?

கவிதை





கவிதை பற்றி கவிதை எழுதுவது கடினம் என்றனர்...
அப்படியா என்றேன் சிரித்துகொண்டே.....
இன்று என்னவளை பற்றி கவிதை எழுதயிலே உணர்ந்தேன் .....
ஆம் கவிதை பற்றி கவிதை எழுதுவது கடினம் தான் என்று.....

முத்தம்




அழகியே ...!
நான் உன்னிடம் கேட்பதெல்லாம் ,
ஒரே ஒரு முத்தம் தான் .....!
உன் க
ன்க்குழி அளவு முத்தம் .
தான்...
ஆனால் ......!
என் கன்னம் குழி விழும் ..
அளவிலான முத்தம் ......!

முத்தமிழ்





முத்தமிழ் மட்டும்தானே
உனக்குத் தெரியும்
எனக்கு இன்னொரு தமிழும்
தெரியுமே என்று
சிரித்தாய்...

என்னவென்று விழிகளால்
வினவிய மறுநொடி
என் புறங்கையில்
முத்தமிட்டு இதுதான்
"முத்த தமிழ்" என்றுகூறி
ஓடிப்போனாய்...

பிள்ளைத்தமிழ் மனசுக்காரி
இவள் என்று சிலிர்க்கிறது
என் கவித்தமிழ்!

சனி, 12 டிசம்பர், 2009

என் கவிதை


என் கவிதை படிப்பவர்கள்
எல்லாரும் என் காதலி
கொடுத்து வைத்தவள்
என்கிறார்கள்

அது பொய் நான் தான்
கொடுத்து வைத்தவன்
என்னவளை
காதலிப்பதற்கு

வியாழன், 3 டிசம்பர், 2009

அடர்மழை





அடர்மழை நாளொன்றில்
குளிரோடும்
சிறுது சிலிர்போடும்
ஒரு பயணம்

மழை நீர் துளிகள்
போல் துள்ளும்
என் உள்ளத்தில் உன்முகம்
கண்டு மகிழ்கிறேன்

இருட்டும் மழைமேகம்
போல இடையறாது
உன்னையே துறத்தும்
என் நினைவுகள்
கார்மேகம் கலைந்தாலும்
நான் கண்ட
கனவுகள் கலையாது....
அடாது பெய்யும்
மழைபோல் விடாது
தொடரும் உன்
நினைவுகள்....
மழைநீர் வடிந்தாலும்
உன் நினைவுகள்
வடியாது...
வெள்ளநீர்
விலகினாலும்
உன்னை விலகாது
என் நினைவுகள்...

புதன், 2 டிசம்பர், 2009

யார் இவள்





யார் இவள் என்று தெரியவில்லை
மனம் என்னவள் என்றது அவளை



அவள் பேச்சில் நான் என்னை இழந்தேன்
அதற்காகவே நான் தினம் பிறந்தேன்



என் இதயத்தை யாரும் கேட்டு விடாதீர்கள்
என்னவள் அதைச் திருடிச் சென்றுவிட்டாள்


பொத்தி வைத்த என் ஆசையெல்லாம்
இன்று சிறகு முளைத்து சிட்டாய்ப் பறக்குதடி



உயிர்வரை சென்று உறவுகள் கொண்டு
வாழ்வது தானே வாழ்க்கையடி



இதயத்தில் நுழைந்தாய் காதலாய்ப் பிறந்தாய்
இன்று என்னுயிராய் வாழ்கின்றாய்



நான் உறங்கிட உன் மடிகொடு
என் கண்ணுறக்கம் காணும்வரை விழித்திரு



இரு உள்ளங்களின் சங்கமம் தானோ
இவ்வுலகில் காதல் என்று பெயர் ஆனதோ



என் கனவுகள் நினைவாகிறது உன்னால்
நிஜம் நீயாகா இன்று என் முன்னால்



என் காதல்ப்பயணம் உனக்காய்க் காத்திருக்கிறது
என் உயிர்பிரியும் வரை பிரியா உறவாக நீயிரு



இதயமே நீ என்றும் என்னோடு இருப்பாய்
என்று நான் எண்ணியது என் தவறோ



ஒரு நெடியில் அவளைக் கண்டதும்
என்னை விட்டுவிலகிச் சென்று விட்டாய்



என் இதயத்தில் ஒரு பாதச்சுவடு கண்டேன்
என்னவள் தான் அங்கு வந்து போயிருக்க வேண்டும்



அவள் விழிகளைப் பார்த்த போதுதான் தெரிந்தது
என்னைக் காதல்ச் சிறைப்படுத்தியது அவள் விழிகள் என்று



அடி பெண்ணே... உன் விழிகள் பேசும் மொழியென்ன
அது புரியாமல் தினம் தவிப்பவன் நானடி



எனக்குள்ளே ஏன் இந்த மாற்றம்
எல்லாம் என்னவள் செய்த மாயம்
Powered By Blogger