Silambarasan.S.A .F.M.[Bahrain]


சிலம்புவின் காண இசை மழை

வியாழன், 11 பிப்ரவரி, 2010

என் தேவதை






எண்ணங்கள்
எண்ணிக்கை இல்லாமல்
சிதறிக் கிடக்க

நினைவுகளில்
நிலை நிறுத்தி
சிந்தையில் கிடத்தி

கற்பனைக்
கவிதைகளை காதலுடன்
சிலவற்றை எழுத

எழுதுகோல்
எடுத்து சிக்கலாய் கிறுக்கினேன்
ஒற்றை வரி கவிதை,
என் தேவதையின் பெயர்.

வரம் கேட்கிறேன்





என்னவளை நினைக்கும் பொழுதெல்லாம் இதயம் துடிதுடிக்கிறது. என் இதயத்தில் வாழும் அவளுக்கு வலிக்கக்கூடாது என்பதற்காக வரம் கேட்கிறேன் கடவுளிடம் என் இதயம் நின்றுபோக.


புதன், 10 பிப்ரவரி, 2010

வள்ளல்








உன் செவ்விதழ் திறந்து
பேசுவதில்…
நீ வள்ளல் என்பதை
ஒத்துக் கொள்கிறேன்..!
அதே வேளையில்
உன் செவ்விதழ்களை மூடி
எனக்கொரு முத்தமிடு…
என்றால் மட்டும்
கொடுக்க மாட்டேன் என
கஞ்சத் தனம் செய்கிறாயே அது ஏன்?
வள்ளலிடம் கஞ்சத்தனம்
கூடாது பெண்ணே..!
நீ வள்ளலாய் இருந்தால்தான்
இந்த வறியவனுக்கு வாழக்கையே..!











ஒளிபுகமுடியாத அடர்ந்த காடு.....


அதை
நான்கே ஈரடுக்கு அறைகளாக பிரிக்கும் கொடிகள்!

அதனுள்
எப்பொழுதும் இடைவிடாது பாயும் ஆறு!

அதை
பாதுகாக்க வரிசையாய் போர்வீரர்கள்!

அவர்களுக்கு
பாதுகாப்பாக மேல் போர்த்திய கவசம்!

இவ்வளவு சிறப்பு வாய்ந்த வனத்தில்

வனவாசம் செய்யும் தேவதையாய் ! என்னவளே நீ !

என் இதயத்தில் எப்போதும் நீ, நீ மட்டும் தான்!

இறைவா!!






இறைவன் படைத்த இதயத்தில்

இரு ஆரிக்கிள், இரு வெண்ட்ரிக்கிள்
என நான்கே அறைகள்!

ஏய்! கஞ்சனே !! இறைவா!!

இவ்வளவும் படைத்த உனக்கு
என் காதலிக்கு ஒரு தனி அறை ஒதுக்க தோன்றவில்லையா?
சரி!! மன்னித்து விடுகிறேன் போ!

இதயம் முழுவதும் அவள் தானே வசிக்கிறாள் !!

பின்பு ஏன் ஓர் தனி அறை !!!!
Powered By Blogger