Silambarasan.S.A .F.M.[Bahrain]


சிலம்புவின் காண இசை மழை

ஞாயிறு, 29 நவம்பர், 2009

என்னவள் மீதான என் காதல்






என்னவள் மீதான என் காதல்
அதிகபட்சம் என் வாழ்நாள் வரை
குறைந்தபட்சம் என் மரணம் வரை

வாரமே வரமாகும்




திங்கள் கிழமை
நீ வந்தால்
அந்த வாரமே
வரமாகும்...

******************
செவ்வ்வாய்க்கு
ஒருதரம்
சென்று வா
அங்கேயும்
ஜீவராசிகள்
வாழத்தொடங்கும்...

*******************

புதனென்றால்
வாசிகசாலைகளை
மூடி விடுகிறார்கள்
இருந்தாலென்ன
உன் கண்கள்
திறந்துதானே
இருக்கின்றன
நான் வாசிப்பதற்கு...

******************


நீ
கள்ள வியாழனையும்
நல்ல
வியாழ்னாக்கிப்
போகிறாய்...

*******************
வானத்துக்கு வெள்ளி
வாழக்கைக்கு நீ!
வழிகாட்டி....

*******************

உனக்கு
சனி தோஷமாம்
என் வாரத்தில்
சனியையே
அழித்துவிட்டேன்

******************

ஞாயிற்று
விடுமுறையிலும்
நிறைய
வேலை செய்ய
வேண்டியிருக்கிறது
உன்னைப் பார்க்க

சனி, 28 நவம்பர், 2009

ஒரு நாள் பார்வை




ஒரு நாள் பார்வையிலே
என் நெஞ்சின் ஓரத்தில்
இடம் பிடித்தவளே
பார்த்தேன் உன்னை சிலநாள்
பழகினேன் உன்னுடன் பலநாள்
காலை விடிந்தது
அதுவே நம் கல்யாணமானது
நம்பி என் கரம்பிடித்த தேவதையே
பணம் தேடி அலையும் மானிடரில்
என் குணம் தேடி வந்த தெய்வமே
உயிர் உள்ளவரை போராடுவேன்
நான் வாழ்வதற்காக அல்ல
உன்னை வாழவைப்பதற்காக மட்டுமே

க‌வ‌லை


உன்னிடம் மனம் விட்டுப்பேச,
வம்பு பேசி அரட்டையடிக்க,
உன் தோள்சாய்ந்து ஆறுத‌ல் தேட‌,
க‌வ‌லை மறந்து
உன் க‌ர‌ம் ப‌ற்றி முத்த‌மிட‌,
ஆயிர‌ம் விச‌ய‌ங்க‌ள் உண்டு என்னிட‌ம்…

உனக்காக




உனக்காக எப்போதும் உயிர் வாழ ஆசை………………!
உன் பெயரை மட்டும் உச்சரிக்க ஆசை………………..!

~~

உன் மடியில் தலை சாய்ந்து உறங்கி விட ஆசை…………!
உனக்காக மட்டும் கவிதை எழுதிட ஆசை………!

~~

உனக்கு பிடித்தவை எல்லாம் உன்க்கும் பிடிக்க ஆசை………!
எப்போதும் உன் காதல்னயி இருந்து விட ஆசை……!

~~

தனிமையில் நீ இருந்தால் நினைவாக நான் வர ஆசை………..!
நினைவாக நீ இருந்தால் நிஜமாக நான் வர ஆசை…………..!

~~

எப்போதும் என் கனவில் நீ வர ஆசை………………….!
கனவில் நடப்பதெல்லாம் நிஜமாக வேண்டும் என்று ஆசை………!

~~

என் மனதுக்குள் உன்னை குடி வைக்க ஆசை……….!
என் உயிரை உன் உயிரில் கலந்து விட ஆசை…………!

~~

உனக்காக என் உயிரை தந்து விட ஆசை………!
உனக்காக ஓர் ஜென்மம் எடுத்து வர ஆசை………..!

அழகு



உன் கூந்தலை கலைத்துச்
சென்ற குற்றத்திற்காக
தென்றலைச் சிறையிட்டிருப்பேன்..!
கூந்தல் கலைந்து போனாலும்..?
உன் அழகு குறையாமல்
மேலும் கூடியிருக்கிறது என்பதால்
தென்றலை தண்டிக்காமல் விடுகிறேன்..!

என் காதல்

பூக்கள் அழகாய் இருக்கின்றன ...
உன் கூந்தலில் இருப்பதனால் ...

நிலவு பிடிக்கிறது ...
உன் முகம் போல் தெரிவதனால் ...

தென்றல் குளிர்கிறது ....
உந்தன் மொழி போல் வீசுவதால் ...

மயில் நடம் ஆடுகிறது...
உன் நடைதனை கண்டவுடன் ...

தேன் பலா இனிக்கிறது ...
உன் இதழ்களின் சுவை போலே ....

இருளும் வியக்கிறது ...
உன் கரு விழி தனை போலே ....

வாழ்தல் விரும்புகிறேன் ...
உந்தன் காதல் இருப்பதனால் ...

முதல் பரிசு



உனக்கு
எதை வாங்கி
வருவது என்ற
குளப்பத்தில்

கண்ணை மூடியபடி
ஒன்றை எடுத்தேன்

கண் திறந்து
பார்க்கையில்

கையில் இருந்தது
மட்டும் சிரித்துக்
கொண்டிருந்தது

கடையில்

இருந்ததெல்லாம்
அழுது கொண்டிருந்தது

வெள்ளி, 27 நவம்பர், 2009

உனக்கென இருப்பேன்



என் உயிர் போனால் உனக்கு அழுகை வருமோ....?
தெரியாது ...
ஆனால் உனக்கு அழுகை வந்தாலே என் உயிர் போய்விடும்.

*********************************************
உயிரோடு இருந்தால்
உனக்கென இருப்பேன்

உயிர் இன்றிப் போனால்
உன் உள்ளத்தில் இருப்பேன்

மனைவிக்காக



பிறந்தால் இறந்துதான் ஆகவேண்டும்...
ஏன்
அந்த உயிர் என் மனைவிக்காக
போகக்கூடாது
இறைவா என் மனைவிக்காக
நான் ஒன்றும் தரவில்லை
என்
ஆயுளையும் அவளுக்கே தந்துவிடு
நான் அவள்
இதயத்தில்
வாழ்ந்து கொள்கிறேன்

உன் உயிர் காதலன்



கார்மேகம் உனக்கு குடை பிடிக்கும்
ஏமாந்து விடாதே
மழை துளிகள் உன்னை முத்தம் மிட
நடக்கும் சதி வேலை அது

உன் கூந்தலில் இறுதி ஊர்வலம் செல்ல
பூக்கள் எல்லாம் உன்னை பார்த்து புன்னகைக்கும்
மயங்கி விடாதே

உன் பாதங்கள் பட்டு மோட்சம் அடைய
பனி துளிகள் உன் பாதையில் தவம் கிடக்கும்
பதட்டப்படாதே

நான் அவர்களை போல் சதிகாரனும் அல்ல
மயக்கி வைக்க மாயக்காரனும் அல்ல
உன்னை மணக்க துடிக்கும்
****************உன் உயிர் காதலன் .************

அன்பு


உன்னையும் என்னையும்
பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை
என்றவள் பிரிந்தே போய்விட்டாய்…
என்னை விட்டு உன்னோடு வந்து
கொண்டிருக்கிறது
என் மனமும், உயிரும்!
Powered By Blogger