
சனி, 17 ஏப்ரல், 2010
என் கல்லறை
ஆசை நாயகி

அன்பே
பாறைகூடப் பூப்பூக்கும் உன்
பொன்முகத்தைக் கண்டால்
தேயும் நிலாக்கூட
தினசரி வந்து போகும் உன்
பிறைபோல் நெற்றி பார்க்க
சிகரம்கூட சரிந்து பார்க்கும் உன்
சிரிப்பொலி கேட்டால்
சத்தமில்லாது நீ நடந்து போகையில்
மண்கூட முத்தம் தருமடி
காற்றில் உன் மூச்சுப்படுவதால் அது
தென்றலாய் மணம் வீசுதடி
கானகியே
நீ பாடும் குரல் கேட்டு
குயில்கூட தன் குரல் மற்ந்துபோச்சடி
ஆடும் மயில்கூட தன்
ஆட்டமிழந்து அந்தரிக்குதடி
ஆசை நாயகியே
ஆனந்தம் கொள்கின்றேனடி உன்
அழகினை இவர்கள் புரிந்து கொண்டதால்
கோடி அழகுகள்

உன் நினைவருகில்...! விண்ணைத் தாண்டிப்
போகுது.....என் எண்ணம்.
என்னைத் தாண்டிப்
போனது....வந்த துன்பம்.
மடல் கண்டு உன்னை அணைக்க....
கரம் இங்கு நீட்டுகிறேன்.
நீ..... வருவாயா...
உன்னிதயத்தைத் தருவாயா.
உன் கைப்பட்ட வரிகள்...
என் மீது விழுந்து.
புதுராகம் பாடுது...
என்னுள்ளம்.
மை கொண்ட விழிகள்...
உன் காதல் கண்டு.
மணவறை ஆனது...
என்னிதயம்.
கிளிகூட உன் பெயரை...
அழகாகச் சொல்லும்.
அதுகூட பார்க்கிறது...
உன்வரவை.
உன் காதல்...
மடல்கள்.
இரவென்றால் எனக்கு...
பஞ்சுமெத்தை.
காலம் எல்லாம்...
உன்னோடு வாழ.
காத்திருக்கின்றேன்...
உன் நினைவருகில்.

இந்த உலகம் கூட எனக்குத் தேவையில்லை..

இந்த உலகம் கூட
எனக்குத் தேவையில்லை..
நீ என்
அருகில் இருந்தால்..
******************************
******************
விரல்களிடையே விரல் நுழைத்து
நடக்கையில் தான் தெரிந்தது....
என் மேல் நீ
வைத்திருந்த காதலின்
அளவு என்னவென்று!!
""""""""""""""""""""""""""""""
உன்னை
அதிகமாய் நினைப்பதாலோ
என்னவோ..
என்னை
நினைப்பதை
மறந்து விட்டேன்...
புதன், 14 ஏப்ரல், 2010
வாழ்க்கை

காதல் என்றாய் கன்னம் சிவந்தேன்..
கண்ணிமைகள் படபடக்க
கதவோரம் சென்று மறைந்தேன்..!!
கதவருகே வந்து நின்று
கை விரலால் எனைத் தீண்ட
கண்மூடி ஒரு கணமே
உன் கைகளுக்குள் நான் புகுந்தேன்..!!
கைகளுக்குள் புகுந்த என்னை
காதலால் நீ தழுவ
கணநேரத்தில் சுதாரித்தே நான்
கலவரமாய் விலகி நின்றேன்..!!
ஏனென்று நீ கேட்க
வெட்கத்தில் நான் பூக்க..
கற்பனையில் விரிந்ததுவே நம்
அற்புதமான காதல் வாழ்க்கை..!!
வானிலா

வாஞ்சையோடு உனக்கு
வானிலா வரையும்
வண்ண மடல் இது
கண்ணால் வாசித்திடு..
விண்ணில் நான் நலம்
மண்ணில் நீ நலமா
கண்ணிமை மூடியே தினமும்
உன்னை காண்கிறேன்
பலவர்ண வானவில்
புடைசூழ...
மின்னும் நட்சத்திரங்கள்
மிளிர..
சட்டென மறையும் மின்னல்
படமெடுக்க..
இடிகள் மேளச் சத்தம்
முழங்க..
பஞ்சு மேகங்கள் என்
பிஞ்சு விரல்களை பிடித்து
அழைத்து வர..
நீலவானமதில் நான்
உல்லாசமாக
உலா வந்து
மெல்ல மெல்லமாக
மண்மீது இறங்கி
உன்னை கட்டியணைத்து
என் காதலைச் சொல்லும்
அவ்வினிய பொன்னாளுக்காக
செவ்விதழில் சாயம் பூசி
மீன்விழிகளுக்கு மை அடித்து
கருங்கூந்தலை வாரி இழுத்து
கைகால்களை அழகுபடுத்தி
தேவதை போல் உன்முன்
தோன்றும் இப்பதுமையை
தென்றலாக வருட
கடற்கரை மணலில்
படகடியில் காத்திருப்பாயா..?
இத்துடன் என் மடலை
காதலோடு முடித்து
காத்திருப்பாய் என்ற ஆவலோடு
விடைபெறும் நான்
அழகு

பூக்கள் பூக்கும்
உன்னைக் கண்டால்
ஏக்கம் கொள்ளும்.
பெளர்ணமி நிலவும்
பார்த்தால் உன்னை
தேக்கம் கொள்ளும்.
கண்ணே உன்னை
கண்டேன் முதல்நாள்
கொண்டேன் ஆசை
என்னை நீ ஏற்றிட
உன் அன்பை பெற்றிட
அதில் நான் நிலைத்திட.
எல்லாம் எல்லாம்
உன்னில் அழகு
எதை நான் சொல்வேன்
உன்னில் குறைவு.
உச்சம் நிறைவு
உந்தன் அழகு
மிச்சம் இல்லை
அச்சம் கொள்ள.
உன் புன்னகை அழகில்
புதைந்து போனேன்.
உன் கண்களின் அழகில்
கரைந்து போனேன்.
உன் வார்த்தையின் அழகில்
நிறைந்து போனேன்.
மொத்த உன் அழகில்…..நான்
தொலைந்து போனேன்.
ரோஜா

என் தோட்டம் முழுக்க ரோஜா செடிகள்தான்...
முதல் முதலாய் பூத்த பூக்களிடம் சொன்னேன்...
உங்களை தொட்டுப் பறிக்க...
தேவதை ஒருத்தி விரைவில் வருவாள் என...
அத்தனை பூக்களும் வாடாமல் காத்திருக்கிறது...
*****************************
இன்று பூத்து குலுங்கும்
என் இதயம்
நீ முத்தமிடுவதற்கு முன்
மொட்டுகளாய் இருந்ததாய் ஞாபகம்.....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)